×

சாமியார்மடம் அருகே குழிக்குள் விழுந்தவர் மீட்பு

சாமியார்மடம், மே 10: சாமியார்மடம் அருகே வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சி 9 வார்டு நாரகன்விளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் இருந்த குழியில் நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சித் தலைவர் ஜான்டென்சிங்கிற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து ஊர் மக்கள், தமிழக அரசின் மருத்துவ குழு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து குழிக்குள் விழுந்தவரை உயிருடன் மீட்டு தக்கலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாமியார்மடம் அருகே குழிக்குள் விழுந்தவர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Samiyarmadam ,Valvachakostam Parish 9 Ward Narakanvilai ,
× RELATED வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சி...